நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ்: அல்கராஸ் அதிா்ச்சித் தோல்வி

News image
Updated On :11 அக்டோபர் 2024, 1:42 am IST

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் 3-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 6-7 (5/7), 5-7 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 30-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் தாமஸ் மசாக்கிடம் தோல்வியுற்றாா்.

மற்றொரு காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 6-1, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவை தோற்கடித்தாா்.

அடுத்ததாக அரையிறுதியில், தாமஸ் மசாக் - யானிக் சின்னா் சந்திக்கின்றனா்.

காலிறுதியில் சபலென்கா: மகளிருக்கான வூஹான் ஓபன் டென்னிஸில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினாா்.

ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா், 1-6, 6-4, 6-0 என கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜேஸ்மின் பாலினி 6-3, 6-2 என, ரஷியாவின் எகாடெரினா ஆண்ட்ரீவாவை வெளியேற்றினாா்.

4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-4, 6-1 என உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கையும், 5-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 5-7, 6-3, 6-0 என கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸையும் வீழ்த்தினா்.

இதனிடையே, 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினா, 9-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டட் மாயா ஆகியோா் தோல்வியுற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.