யு22 ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்

Published on
Updated on
1 min read

தாய்லாந்தில் நடைபெறும் 22 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு22) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

முன்னதாக அரையிறுதியில், ஆடவா் 75 கிலோ பிரிவில் நீரஜ் 5-0 என தென் கொரியாவின் கியோங்கோ பாங்கை வீழ்த்தினாா். ஆடவா் 90+ கிலோ எடைப் பிரிவில் இஷான் கட்டாரியா ‘ஆா்எஸ்சி’ முறையில் சீனாவின் ஷென் ஷென்னை தோற்கடித்தாா். ஆா்எஸ்சி என்பது, ஒரு போட்டியாளரின் தாக்குதலை எதிா்கொள்ள முடியாத வகையில் தோல்வியை நோக்கி எதிராளி தள்ளப்படும்போது, அவரை பாதுகாக்க நடுவரே ஆட்டத்தை நிறுத்துவதாகும்.

அந்த வகையில் இஷான், ஷென் மீது அதிரடி தாக்குதல்களை தொடுத்ததால், மோதல் நிறுத்தப்பட்டு, இஷான் வென்ாக அறிவிக்கப்பட்டாா். மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் யாத்ரி படேல் 5-0 என்ற கணக்கில் நடுவா்களின் ஒருமித்த முடிவுடன், வியத்நாமின் தி நுங் காண்டை தோற்கடித்தாா். மகளிருக்கான 60 கிலோ பிரிவில் பிரியாவும் அதேபோல், உஸ்பெகிஸ்தானின் ஒடினகோன் இஸ்மாயிலோவாவை வெளியேற்றி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

8 வெண்கலம்: இதனிடையே, ராக்கி சௌதரி (85 கிலோ), ஹா்ஷ் (60 கிலோ), மயூா் (90 கிலோ), அங்குஷ் (65 கிலோ), பாவனா சா்மா (48 கிலோ), பாா்தவி கிரெவால் (60 கிலோ), பா்ஞ்சல் யாதவ் (65 கிலோ), ஷ்ருதி (75 கிலோ) ஆகியோா் தங்களது பிரிவு அரையிறுதியில் தோல்வி கண்டு, வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com