கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்!

சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை - @BAI_Media

Published On :

உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

இந்தியாவிலிருந்து உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் அரையிறுதிக்கு முதல்முறையாக தகுதி பெற்ற இந்திய ஆடவர் இணை என்ற பெருமையுடன் சனிக்கிழமை(டிச. 20) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சாத்விக் - சிராக் இணை, சீனாவின் லியாங் வேய் கெங்க் - வாங்க் சாக்க் இணையை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், 21-10, 17-21 13-21 என்ற கணக்கில் இந்திய இணை தோல்வியுற்றது.

உலக பாட்மிண்டன் தரவரிசையில் மூன்றாமிடத்தில் உள்ள சாத்விக் - சிராக் இணையும், ஐந்தாமிடத்தில் உள்ள சீன இணையும் இதுவரை மொத்தம் 12 ஆட்டங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து களம் கண்டுள்ளனர். அவற்றில் சாத்விக் - சிராக் இணை 8 முறை தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்தப் போட்டியில் சாத்விக் - சிராக் இணை வெண்கலம் வென்றதன் மூலம், கடந்த 2018இல் பிஎம்எஃப் உலக டூர் பாட்மிண்டன் இறுதியில் பி. வி. சிந்து தங்கம் வென்றதுக்குப் பின், இந்தியாவுக்கு இரண்டாவது முறையாகப் பதக்கம் கிடைத்துள்ளது.

Summary

Indian men's doubles pair of Satwiksairaj Rankireddy and Chirag Shetty bowed out of the BWF World Tour Finals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.