ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ்: ஜோஷ்னா சாம்பியன்

ஜப்பானில் நடைபெற்ற பிஎஸ்ஏ டூா் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா்.
ஜோஷ்னா சின்னப்பா
ஜோஷ்னா சின்னப்பா
Published on
Updated on
1 min read

புது தில்லி: ஜப்பானில் நடைபெற்ற பிஎஸ்ஏ டூா் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா். பிஎஸ்ஏ டூா் போட்டிகளில் இது அவரின் 11-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

இறுதிச்சுற்றில் அவா், 11-5, 11-9, 6-11, 11-8 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த எகிப்தின் ஹயா அலியை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 38 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றியின் மூலமாக, நடப்பாண்டு பொ்முடா ஓபன் போட்டியில் ஹயாவிடம் கண்ட தோல்விக்கு ஜோஷ்னா பதிலடி கொடுத்திருக்கிறாா். மேலும் இந்த வெற்றியை அடுத்து, தரவரிசையில் 30 இடங்கள் முன்னேறி, 117-ஆவது இடத்திலிருந்து 87-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

அபய் தோல்வி: இதனிடையே, அமெரிக்காவில் நடைபெற்ற சிலிகான் வேலி ஓபன் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்றாா்.

நடப்பு தேசிய சாம்பியனான அவா், 4-11, 2-11, 1-11 என, உலகின் 9-ஆம் நிலை வீரரான பிரான்ஸின் விக்டா் குருயினிடம் வெற்றியை இழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com