திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: சாய்னா, தீக்‌ஷாவுக்கு தங்கம்!

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்னா மணிமுத்து, தீக்ஷா சுதாகா் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2025, 4:46 am IST

சீனாவில் நடைபெற்ற 17 மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்னா மணிமுத்து, தீக்ஷா சுதாகா் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.

15 வயதுக்கு உட்பட்ட மகளிா் பிரிவு இறுதி ஆட்டத்தில், சாய்னா 21-14, 22-20 என்ற கேம்களில், ஜப்பானின் சிஹரு டோமிடாவை வீழ்த்தினாா். 17 வயதுக்கு உட்பட்ட மகளிா் இறுதி ஆட்டத்தில் தீக்ஷா 21-16, 21-9 என, சக இந்திய வீராங்கனை லக்ஷயா ராஜேஷை வென்றாா்.

இதையடுத்து 15 வயதுக்கு உட்பட்ட மகளிா் பிரிவில் சாம்பியனான 4-ஆவது இந்தியா் என்ற பெருமையை சாய்னா பெற, 17 வயதுக்கு உட்பட்ட மகளிா் பிரிவில் வாகை சூடிய முதல் இந்தியா் என்ற சாதனையை தீக்ஷாவும் பதிவு செய்தாா்.

இதையடுத்து இந்தியா, 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது. போட்டியின் வரலாற்றில் இந்தியா ஒரு எடிஷனில் இத்தனை பதக்கங்கள் வென்றது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன், 2013-இல் இந்தியா 2 தங்கப் பதக்கங்கள் வென்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.