இறுதி ஆட்டத்தில் புணேரி பல்டன்

Published on

புரோ கபடி லீக் போட்டியின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் புணேரி பல்டன் 50-45 புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை புதன்கிழமை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

தபங் டெல்லி கே.சி.யுடன் அந்த ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை (அக். 31) பலப்பரீட்சை நடத்தவுள்ளது புணேரி பல்டன்.

முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற தெலுகு அணிக்கு எதிரான ஆட்டத்தில் புணேரி அணி 32 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 8 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. தெலுகு அணி 34 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது.

அதிகபட்சமாக, புணே தரப்பில் ரெய்டா் ஆதித்யா ஷிண்டே 22 புள்ளிகள் கைப்பற்ற, தெலுகு தரப்பில் ஆல்-ரவுண்டா் பரத் 23 புள்ளிகள் பெற்று அசத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com