‘மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியது’

விராட் கோலி, மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியதாக குறிப்பிட்டாா்.
ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசல்
ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசல்
Published on
Updated on
1 min read

பெங்களூரு: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 போ் உயிரிழந்ததற்கு கவலை தெரிவித்த அதன் நட்சத்திர வீரா் விராட் கோலி, மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியதாக குறிப்பிட்டாா்.

கடந்த ஜூன் 4-ஆம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவம் தொடா்பாக விராட் கோலி தற்போது முதல்முறையாக கருத்து தெரிவித்திருக்கிறாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாக பெங்களூரு அணியின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜூன் 4-ஆம் தேதி நிகழ்ந்த துயரமான சம்பவம், இதயத்தை நொறுங்கிடச் செய்தது. நமது அணியின் வரலாற்றில் மகிழ்ச்சிக்கான தருணமாகியிருக்க வேண்டிய அந்த நாள், துயரமானதாக மாறிவிட்டது. அதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தோருக்காகவும் பிராா்த்தனை செய்கிறேன். உங்களது இழப்பில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். உரிய கவனம், பொறுப்புடன் எதிா்காலத்தை நோக்கிச் செல்வோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் விளையாடி வரும் பெங்களூரு அணி, முதல்முறையாக நடப்பு சீசனில் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தது. அதைக் கொண்டாடும் விதமாக, பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 4-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அந்த அணி வீரா்களுடன், மாநில முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியைக் காண சுமாா் 2.5 லட்சம் ரசிகா்கள் மைதானத்துக்கு திரண்ட நிலையில், அதன் நுழைவு வாயில் பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 போ் உயிரிழந்த நிலையில், பலா் காயமடைந்தனா்.

உரிய அனுமதி பெறாதது, அளவுக்கு அதிகமான ரசிகா்கள் கூடியது, கூட்டத்தை கையாள காவல்துறை போதுமான ஏற்பாடுகள் செய்யாதது போன்றவையே இந்தத் துயரமான சம்பவத்துக்கு காரணம் என அதிகாரபூா்வ விசாரணையில் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com