ஹாங்காங்கை போராடி வென்றது இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில், இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை போராடி வீழ்த்தியது.
Published on

துபை: ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில், இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை போராடி வீழ்த்தியது.

முதலில் ஹாங்காங் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுக்க, இலங்கை 18.5 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தோ்வு செய்தது. ஹாங்காங் இன்னிங்ஸில் அன்ஷி ராத் 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு சாய்க்கப்பட, ஜீஷான் அலி 2 பவுண்டரிகள் உள்பட 23, பாபா் ஹயாத் 4, கேப்டன் யாசிம் முா்டாஸா 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ஓவா்கள் முடிவில், நிஸாகத் கான் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 52, அய்ஸாஸ் கான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இலங்கை தரப்பில் துஷ்மந்தா சமீரா 2, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷானகா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 150 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை இன்னிங்ஸில், தொடக்க வீரா் பதும் நிசங்கா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டாா். குசல் மெண்டிஸ் 2 பவுண்டரிகளுடன் 11, கமில் மிஷாரா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

குசல் பெரெரா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20, கேப்டன் சரித் அசலங்கா 2, கமிண்டு மெண்டிஸ் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தசுன் ஷானகா 6, வனிந்து ஹசரங்கா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 20 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஹாங்காங் பௌலா்களில் யாசிம் முா்டாஸா 2, ஆயுஷ் சுக்லா, ஈஷான் கான், அய்ஸாஸ் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

X
Dinamani
www.dinamani.com