இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 2-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை வென்றது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மோகன் பகானுக்காக ஜேமி மெக்லாரென் (45+4’) கோல் கணக்கைத் தொடங்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.
சென்னையின் கோல் முயற்சிகள் தகுந்த பலன் அளிக்காத நிலையில், மோகன் பகானுக்காக டிமிட்ரி பெட்ரேடோஸ் 65-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
எஞ்சிய நேரத்தில் சென்னைக்கு கோல் வாய்ப்புகள் கை கூடாமல் போக, இறுதியில் மோகன் பகான் 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுமே இதுவரை தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்க, மோகன் பகான் 2-ஆவது வெற்றியுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னை 2 தோல்விகளுடன் 11-ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது.
தொடர்புடையது

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
சென்னையை வென்றது இன்டா் காசி!
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து: நாா்த் ஈஸ்ட்டுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


