திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னையை வென்றது மோகன் பகான்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:43 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 2-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை வென்றது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மோகன் பகானுக்காக ஜேமி மெக்லாரென் (45+4’) கோல் கணக்கைத் தொடங்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.

சென்னையின் கோல் முயற்சிகள் தகுந்த பலன் அளிக்காத நிலையில், மோகன் பகானுக்காக டிமிட்ரி பெட்ரேடோஸ் 65-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் சென்னைக்கு கோல் வாய்ப்புகள் கை கூடாமல் போக, இறுதியில் மோகன் பகான் 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுமே இதுவரை தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்க, மோகன் பகான் 2-ஆவது வெற்றியுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னை 2 தோல்விகளுடன் 11-ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது.