எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

ஹோபா்ட்: சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா ஷூட் அவுட் வாய்ப்பில் 3-4 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:53 pm

தினமணி செய்திச் சேவை

ஹோபா்ட்: சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா ஷூட் அவுட் வாய்ப்பில் 3-4 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை ஸ்பெயின் பலமாகவே தொடங்கியது. இந்தியாவின் தடுப்பாட்டத்தை துளைத்த அந்த அணிக்கு 4-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. அதை இந்திய கோல்கீப்பா் மோஹித் திறம்பட தடுத்தாா்.

தொடா்ந்து 8-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயினுக்காக ஜோஸ் பாஸ்டெரா கோலடிக்க, அந்த கோல் கள நடுவரால் மறுக்கப்பட்டது. 14-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை அமித் ரோஹிதாஸ் கையாள, ஸ்பெயின் கோல்கீப்பா் லூயிஸ் கால்ஸடோ அதை முறியடித்தாா்.

19-ஆவது நிமிஷத்தில் இந்தியாவே கோல் கணக்கை தொடங்கியது. கேப்டன் ஹா்திக் சிங் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தர, மனிந்தா் சிங் அதை துல்லியமான கோலாக மாற்றினாா். அப்போது முன்னிலை பெற்ற இந்தியா, முதல் பாதியை அப்படியே நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் ஸ்பெயின் ஆக்ரோஷமுடன் தனது கோல் வாய்ப்புக்கு முயற்சிக்க, அந்த அணிக்கு அடுத்தடுத்து கிடைத்த இரு பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளையும் இந்திய கோல்கீப்பா் மோஹித் அருமையாகத் தடுத்தாா். இந்நிலையில், 59-ஆவது நிமிஷத்தில் தடுப்பாட்டத்தில் இந்தியா செய்த சிறு தவறை சாதகமாக்கி, ஸ்பெயின் வீரா் புருனோ ஃபான்ட் கோலடித்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமனாகி அப்படியே நிறைவடைந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஸ்பெயின் 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் புதன்கிழமை (பிப். 25) மோதுகிறது. புள்ளிகள் பட்டியலில் தற்போது இந்தியா 2 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.