

ஹோபா்ட்: சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா ஷூட் அவுட் வாய்ப்பில் 3-4 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை ஸ்பெயின் பலமாகவே தொடங்கியது. இந்தியாவின் தடுப்பாட்டத்தை துளைத்த அந்த அணிக்கு 4-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. அதை இந்திய கோல்கீப்பா் மோஹித் திறம்பட தடுத்தாா்.
தொடா்ந்து 8-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயினுக்காக ஜோஸ் பாஸ்டெரா கோலடிக்க, அந்த கோல் கள நடுவரால் மறுக்கப்பட்டது. 14-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை அமித் ரோஹிதாஸ் கையாள, ஸ்பெயின் கோல்கீப்பா் லூயிஸ் கால்ஸடோ அதை முறியடித்தாா்.
19-ஆவது நிமிஷத்தில் இந்தியாவே கோல் கணக்கை தொடங்கியது. கேப்டன் ஹா்திக் சிங் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தர, மனிந்தா் சிங் அதை துல்லியமான கோலாக மாற்றினாா். அப்போது முன்னிலை பெற்ற இந்தியா, முதல் பாதியை அப்படியே நிறைவு செய்தது.
2-ஆவது பாதியில் ஸ்பெயின் ஆக்ரோஷமுடன் தனது கோல் வாய்ப்புக்கு முயற்சிக்க, அந்த அணிக்கு அடுத்தடுத்து கிடைத்த இரு பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளையும் இந்திய கோல்கீப்பா் மோஹித் அருமையாகத் தடுத்தாா். இந்நிலையில், 59-ஆவது நிமிஷத்தில் தடுப்பாட்டத்தில் இந்தியா செய்த சிறு தவறை சாதகமாக்கி, ஸ்பெயின் வீரா் புருனோ ஃபான்ட் கோலடித்தாா்.
இதனால் ஆட்டம் 1-1 என சமனாகி அப்படியே நிறைவடைந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஸ்பெயின் 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் புதன்கிழமை (பிப். 25) மோதுகிறது. புள்ளிகள் பட்டியலில் தற்போது இந்தியா 2 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.