
ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பாய்மரகுப் படகில் இந்தியாவுக்கு வெள்ளி உள்ளிட்ட 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இன்று நடைபெற்ற பாய்மரகுப் படகுப் போட்டியில் 49er FX பிரிவில் இந்தியாவின் வர்ஷா கெளதம், ஸ்வேதா ஷெர்வேகர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்கள்.
ஆடவர் 49er பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. வருண் தக்கார், கணபதி செங்கப்பா ஆகிய இருவரும் வெண்கலம் வென்றுள்ளார்கள்.
மேலும் ஓபன் லேசர் 4.7. பிரிவில் இந்தியாவின் ஹர்ஷிதா தோமர் வெண்கலம் வென்றார். இது இந்த ஆசியப் போட்டியில் இந்திய அணி பெறும் 62-வது மெடலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.