உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூஸிலாந்து நேற்று (செவ்வாய்கிழமை) முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், ஆட்டம் இன்றைய தினம் தொடங்கும் என்று நடுவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய ஆட்டம்: http://bit.ly/2XCPXCT
அதன்படி, இன்று ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூஸிலாந்து அணி கடைசி 23 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், இந்திய அணி மிக மோசமான தொடக்கத்தை தந்தது. 2-வது ஓவரில் ரோஹித், 3-வது ஓவரில் கோலி, 4-வது ஓவரில் ராகுல் என வரிசையாக தலா 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
தற்போது, ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.