உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம், இலங்கை அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடாத நிலையில் கைவிடப்பட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) வங்கதேசம், இலங்கை அணிகள் விளையாட இருந்தன. ஆனால், டாஸ் போடுவதற்கு முன்பிலிருந்தே பிரிஸ்டோலில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் டாஸ் போடாத நிலையிலேயே ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன்மூலம், இலங்கை அணி தற்போது 4 ஆட்டங்களில் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி 4 ஆட்டங்களில் 3 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
முன்னதாக பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான ஆட்டம் டாஸ் போடாத நிலையில் கைவிடப்பட்டது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.