முதல்முறையாகப் பட்டம் வெல்லத் துடிக்கும் இங்கிலாந்தும், பாரம்பரியப் பெருமையை மீட்கப் போராடும் மேற்கிந்தியத் தீவுகளும் செளதாம்ப்டன் ரோஸ்பவுலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் மோதுகின்றன.
பலத்த மழையால் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான நேற்றைய உலகக் கோப்பை ஆட்டம் கைவிடப்பட்டது. 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் மழையால் பாதிக்கப்பட்ட 4-வது ஆட்டம் இதுவாகும்.
இந்நிலையில் இன்றைய ஆட்டம் மழைப் பாதிப்பு எதுவும் இன்றி சரியான நேரத்தில் ஆட்டம் தொடங்கியுள்ளது. டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மே.இ. அணியில் ரஸ்ஸல் இடம்பெற்றுள்ளார்.