கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) 2-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆமதாபாத்தில் மோதுகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அமித் மிஸ்ராவுக்குத் தோளில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதில் லலித் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கொல்கத்தா ஆல்-ரௌண்டர் ஆண்ட்ரே ரஸல் இன்று (வியாழக்கிழமை) தனது 33-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.