கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது.
2012, 2014 என இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இருமுறையும் ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி வென்றுள்ளது. இருமுறையும் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், கெளதம் கம்பீர். 2012-ல் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் மோதியதில் கொல்கத்தா அணி கோப்பையைக் கைப்பற்றியது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதி நடைபெறுகிறது. முதல் பகுதி இந்தியாவில் நடைபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டியில் பவர்பிளே பகுதியில் சிஎஸ்கே பந்துவீச்சாளர் ஹேசில்வுட் அதிக சிக்ஸர்களைக் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 2021: ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக சிக்ஸர்களைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள்
பவர்பிளே - 7 (ஹேசில்வுட்)
நடு ஓவர்கள் - 6 (ரஷித் கான்)
கடைசி ஓவர்கள் - 6 (ஷமி)