பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்கு 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தில்லி அணியில் குல்தீப், அக்சார் பட்டேல், லலித் யாதவ், கலீல் அஹமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மும்பையில் நடைபெற்று வரும் 32வது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
எனினும் தில்லி அணியின் லலித் யாதவ் பந்தில் ஷிகர் தவான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் (9), லியாம் லிவிங்ஸ்டன் (2), ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்தார். எனினும், தில்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால், ஷாருக்கான், ரபாடா, நாதன் எல்லீஸ், ராகுல் சஹார் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
முடிவில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. தில்லி அணியில் குல்தீப், அக்சார் பட்டேல், லலித் யாதவ், கலீல் அஹமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.