நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

லக்னௌ அணியில் மாற்றம்: இங்கி. வீரருக்குப் பதில் ஆஸி. வீரர் தேர்வு

ஐபிஎல் 2022-இல் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியில் காயமடைந்த மார்க் வுட்டுக்குப் பதில் ஆண்ட்ரூ டை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image

மார்க் வுட் (கோப்புப்படம்)

Updated On :1 பிப்ரவரி 2024, 2:16 pm IST


ஐபிஎல் 2022-இல் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியில் காயமடைந்த மார்க் வுட்டுக்குப் பதில் ஆண்ட்ரூ டை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், அவருக்குப் பதில் மாற்று வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 27 ஐபிஎல் ஆட்டங்களில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

2022 ஐபிஎல் மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை மார்ச் 28-ம் தேதி எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.