மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐபிஎல் போட்டியால் தெ.ஆ. வீரர்களின் கவனம் திசை திரும்பியதா?: கேப்டன் பதில்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசை திருப்பியதா...

News image
Updated On :24 மார்ச் 2022, 8:42 am

DIN

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசை திருப்பியதா என்கிற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் பவுமா பதில் அளித்துள்ளார். 

செஞ்சுரியனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 37 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மலான் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்தின் டஸ்கின் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணி 26.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் தமிம் இக்பால் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 48 ரன்கள் எடுத்தார். ஒருநாள் தொடரை 2-1 என வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது வங்கதேச அணி. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றுள்ளது. டஸ்கின் அகமதுக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் கிடைத்தன. கடந்த 20 வருடங்களில் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி ஒருநாள் தொடரில் தெ.ஆ. அணி தோற்றதே இல்லை. 

தென்னாப்பிரிக்க வீரர்கள் இத்தொடரில் மோசமாக விளையாடியதற்கு ஐபிஎல் போட்டியும் ஒரு காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரபாடா, மார்க்ரம் போன்ற தெ.ஆ. வீரர்கள் அடுத்ததாக டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் ஐபிஎல் போட்டியில் விளையாட நேராக இந்தியாவுக்கு வருகிறார்கள் . இதனால் அவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இதுபற்றி தென்னாப்பிரிக்க அணியின் ஒருநாள் கேப்டன் பவுமாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:

இந்தியாவைத் தோற்கடித்த தெ.ஆ. அணி வங்கதேசத்திடம் தோல்வியடைந்து பற்றி எனக்கும் ஆச்சர்யம் உண்டு. நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஐபிஎல் போட்டி தென்னாப்பிரிக்க வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா என்பது பற்றி தனிப்பட்ட முறையில் அவர்களுக்குத் தான் தெரியும். இதுபற்றி அவர்கள் தான் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் ஐபிஎல் போட்டியின் மீதான கவனத்தினால் இங்குத் தோற்றதாகக் காரணம் சொல்ல முடியாது. இந்தியாவுக்கு எதிராக சில அடிகள் முன்னேறிச் சென்றோம். இப்போது சில அடிகள் பின்னால் வந்துள்ளோம். உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற இன்னும் நன்றாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.