சஹார், மொயீன் அலி இல்லை: சவாலை சமாளிப்பாரா புதிய கேப்டன்? (விடியோ)

சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவுக்கு முதல் ஆட்டத்திலேயே தீபக் சஹார், மொயீன் அலி இல்லாத அணியைத் தேர்வு செய்யும் சவால் வந்துள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவுக்கு முதல் ஆட்டத்திலேயே தீபக் சஹார், மொயீன் அலி இல்லாத அணியைத் தேர்வு செய்யும் சவால் வந்துள்ளது.  

கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தி வந்த மகேந்திர சிங் தோனி, நடப்பு சீசனிலிருந்து கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தவுள்ள மூன்றாவது கேப்டன் ரவீந்திர ஜடேஜா.

இந்த நிலையில், ஐபிஎல் 2022 முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை இன்று (சனிக்கிழமை) எதிர்கொள்கிறது. அணியின் முக்கிய வீரர்களான தீபக் சஹார், மொயீன் அலி ஆகியோர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால், இவர்கள் இருவரும் இல்லாத அணியைத் தேர்வு செய்ய வேண்டிய சவால் ஜடேஜாவுக்கு முதல் ஆட்டத்திலேயே வந்துள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடப்போகும் உத்தேச அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), மகேந்திர சிங் தோனி, டுவைன் பிராவோ/கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்ன், மகேஷ் தீக்ஷனா, கேஎம் ஆசிஃப்/ஆர் ஹங்கர்கேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com