இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சிறப்பாக நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் 15-வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடத்தொடங்கியுள்ளது அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சுதந்திரமாக பேட்டிங் செய்ய உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் அணிக்கு ரன் சேர்க்க உதவினார். இதனால், ஸ்ரேயஸ் ஐயர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.