ஐபிஎல்: 89 ரன்களுக்கு சுருண்டது குஜராத் அணி

ஐபிஎல்: 89 ரன்களுக்கு சுருண்டது குஜராத் அணி

குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் தில்லி கேப்பிடல்ஸ் அணி மோதும் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தார் தில்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த்.

குஜராத் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாஹா, டேவிட் மில்லர், சந்தீப் வாரியர் (உமேஷ் யாதவுக்கு பதிலாக) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் கில் 8 ரன்களுக்கும், சாஹா 2 ரன்களுக்கும் நடையைக் கட்டினர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட குஜராத் அணி பவர் பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்கள் சேர்த்தார்.

தில்லி அணியில் முகேஷ் குமார் 3, இஷாந்த் சர்மா 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2, ஜ்கலீல் அகமது 1, அக்சர் பட்டேல் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இறுதியில், 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இதையடுத்து, 90 ரன்கள் வெற்றி இலக்குடன் தில்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com