மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீசியது.
அதன்படி, சண்டிகரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் 8 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து நின்று அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற திலக் வர்மா மறுபுறம் அதிரடியில் இறங்கினார். அவர் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டிம் டேவிட் 7 பந்துகளில் 14 ரன்கள் திரட்ட, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து, 193 ரன்கள் வெற்றி இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.