நடப்பு ஐபிஎல் தொடரின் 40-வது போட்டி புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் திடலில் நடைபெற்று வருகிறது. தில்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல்(ஏப்.24) போட்டியில் டாஸ் வென்ற குஜராஜ் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தில்லி கேப்பிட்டல்ஸ் அணியில், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 23 ரன்களுக்கும், பிருத்வி ஷா 11 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மூன்றாவது வீரராக களமிரங்கிய அக்சர் படேல் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுக்க, அவருக்கு பக்கபலமாக கேப்டன் ரிஷப் பந்த் சிக்ஸர் மழை பொழிந்தார்.
அவர் 43 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுக்க, தில்லி கேப்பிட்டல்ஸ் அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் திரட்டியது.