ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 225 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தில்லி அணி
ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!
படம் | ஐபிஎல் எக்ஸ் தளப் பதிவு

நடப்பு ஐபிஎல் தொடரின் 40-வது போட்டி புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் திடலில் நடைபெற்று வருகிறது. தில்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல்(ஏப்.24) போட்டியில் டாஸ் வென்ற குஜராஜ் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தில்லி கேப்பிட்டல்ஸ் அணியில், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 23 ரன்களுக்கும், பிருத்வி ஷா 11 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மூன்றாவது வீரராக களமிரங்கிய அக்சர் படேல் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுக்க, அவருக்கு பக்கபலமாக கேப்டன் ரிஷப் பந்த் சிக்ஸர் மழை பொழிந்தார்.

அவர் 43 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுக்க, தில்லி கேப்பிட்டல்ஸ் அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் திரட்டியது.

இதையடுத்து, 225 ரன்கள் வெற்றி இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com