சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடலில் நாளை(ஏப். 28) ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரிட்சை நடத்த உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியைக் காணச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஐபிஎல் போட்டியைக் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக வேளச்சேரியிலிருந்து இரவு 10.40, 11.05 மணிக்கும், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து இரவு 11.20, 11.45 மணிக்கும் புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com