ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
இந்த வெற்றியை அடுத்து பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த தில்லி, தகுதிச்சுற்று 1 ஆட்டத்துக்கு வந்துள்ளது. அதேபோல், பெங்களூரும் பிளே-ஆஃப்புக்கு முன்னேறியது.
அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தில்லி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்து வென்றது. தில்லி பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்கியோ ஆட்ட நாயகன் ஆனார்.
இந்நிலையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும். தோற்றால், ஏற்கெனவே 14 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா தகுதி பெறும். இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவை கொல்கத்தா, ஹைதராபாத் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.