ஐபிஎல் போட்டியில் இன்று என்ன நடக்கும்?: பரபரப்பில் ஹைதராபாத், கொல்கத்தா ரசிகர்கள்

ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும்.
ஐபிஎல் போட்டியில் இன்று என்ன நடக்கும்?: பரபரப்பில் ஹைதராபாத், கொல்கத்தா ரசிகர்கள்

ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது. 

இந்த வெற்றியை அடுத்து பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த தில்லி, தகுதிச்சுற்று 1 ஆட்டத்துக்கு வந்துள்ளது.  அதேபோல், பெங்களூரும் பிளே-ஆஃப்புக்கு முன்னேறியது. 

அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தில்லி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்து வென்றது. தில்லி பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்கியோ ஆட்ட நாயகன் ஆனார். 

இந்நிலையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும். தோற்றால், ஏற்கெனவே 14 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா தகுதி பெறும். இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவை கொல்கத்தா, ஹைதராபாத் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com