சிஎஸ்கேவின் அமர்க்களமான வெற்றியை முன்கூட்டியே கணித்த ஷேன் வாட்சன்

முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றிக்குப் பிறகு தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த சென்னை அணி...
சிஎஸ்கேவின் அமர்க்களமான வெற்றியை முன்கூட்டியே கணித்த ஷேன் வாட்சன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பா் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 17.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வென்றது. ஷேன் வாட்சன் - டு பிளெசிஸ் கூட்டணி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றிக்குப் பிறகு தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு மீண்டுள்ளது. ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டாா். இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு மோசமாக விளையாடி வந்த ஷேன் வாட்சன், பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியை முன்கூட்டியே கணித்துள்ளார். ஆட்டத்துக்கு முன்பு ட்விட்டரில் ஷேன் வாட்சன் கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அருமையான ஆட்டம் வரவுள்ளது என்றார். 

வாட்சன் சொன்னது போலவே சிஎஸ்கே அணிக்கு அருமையான வெற்றி கிடைத்தது. இதையடுத்து வாட்சனின் ட்வீட்டைப் பலரும் ரீட்வீட் செய்துள்ளார்கள். நேற்றைய ஆட்டத்தில் வாட்சன் 83 ரன்கள் எடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com