கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தில்லியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிஷப் பந்த், ஷிம்ரோன் ஹெத்மயர் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் கிறிஸ் ஜோர்டனுக்குப் பதில் ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார்.