இன்றும் ரோஹித் களமிறங்குவது சந்தேகம்?

​ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் இன்று ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. ஆனால், இந்த ஆட்டத்திலும் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில்தான் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் நேரடியாக புதன்கிழமை ஆட்டத்தில் களமிறங்கினால், காயம் அடைந்ததிலிருந்து 10 நாள்கள் முழுமையாக ஓய்வு பெற்றதாகிவிடும்.

தொடரின் கடைசி கட்டம் என்பதால், வீரர்களின் உடற்தகுதியில் அணி நிர்வாகம் முழு கவனத்துடன் இருக்கும்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com