கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 46-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம் என கொல்கத்தா இயான் மார்கனும் தெரிவித்தார்.
இரண்டு அணிகளிலும் மாற்றம் எதுவுமில்லை. கடந்த ஆட்டங்களில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகின்றன.