தில்லி கேபிடல்ஸ் அணியுடனான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களாக கிளென் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரன், கிறிஸ் ஜோர்டன், ஷெல்டன் கோட்ரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கெயிலுக்கு இடமில்லை.
தில்லி அணியில் ஷிம்ரோன் ஹெத்மயர், மார்கஸ் ஸ்டாய்னில், ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ஜே ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.