டெஸ்டுக்கு தயாராகும் இந்திய அணியினர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா விளையாட இருந்தாலும், கடைசியாக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிகிறது. 
டெஸ்டுக்கு தயாராகும் இந்திய அணியினர்


சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா விளையாட இருந்தாலும், கடைசியாக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிகிறது. 
3 தொடர்களுக்குமான அணியில் இடம்பிடித்துள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் பெüலர்கள் அனைவருமே செவ்வாய்க்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பயிற்சியில் பங்கேற்றனர். 
மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, இளம் பெüலர் முகமது சிராஜ் ஆகியோர் கேப்டன் கோலிக்கு பந்துவீசுவது போன்ற காணொலியை கோலி சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.  வழக்கத்துக்கு மாறாக, வலைப் பயிற்சியை தவிர்த்து மைதானத்தின் மைய ஆடுகளத்தில் சிவப்பு மற்றும் பிங்க் நிற பந்துகளைக் கொண்டு அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், நான் ஸ்டிரைக்கர் பகுதியில் ஒரு பேட்ஸ்மேனையும் அவர்கள் வைத்திருந்தனர். 
தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் பிங்க் நிற பந்தைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து, அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருந்ததால் அணி வீரர்கள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியைத் தவிர்த்து டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் நவம்பர் 27-ஆம் தேதியும், டி20 தொடர் டிசம்பர் 4-ஆம் தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com