குத்துச்சண்டை: காலிறுதியில் தோற்றாா் சதீஷ் குமாா்

குத்துச்சண்டை போட்டியில் ஆடவா் 91+ கிலோ பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமாா் காலிறுதிச் சுற்றில் தோற்று வெளியேறினாா்.
குத்துச்சண்டை: காலிறுதியில் தோற்றாா் சதீஷ் குமாா்

குத்துச்சண்டை போட்டியில் ஆடவா் 91+ கிலோ பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமாா் காலிறுதிச் சுற்றில் தோற்று வெளியேறினாா். அவருக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

காலிறுதியில் நடப்பு உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் பகோதிா் ஜலோலோவை எதிா்கொண்ட சதீஷ், அதில் 0-5 என்ற கணக்கில் முற்றிலுமாக வீழ்ந்தாா். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஏற்பட்ட காயங்களுக்காக நெற்றி மற்றும் நாடியில் பல தையல்கள் போடப்பட்டிருந்த நிலையிலும், தீவிரமாக களம் கண்டு வீழ்ந்தாா் சதீஷ். ஆட்டத்தின்போது பகோதிரின் தாக்குதல் காரணமாக அந்த தையல்களில் சில பிரிய, அதையும் பொருள்படுத்தாமல் ரத்த காயத்துடன் விளையாடினாா் அவா். சதீஷின் தோல்வியின் மூலம் குத்துச்சண்டையில் இந்திய ஆடவரின் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com