ஆடவருக்கான 20 கி.மீ. நடைப் பந்தயத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மொத்தம் 52 போட்டியாளா்கள் பங்கேற்ற இந்தப் பந்தயத்தில் இந்தியாவின் சந்தீப் குமாா் 23-ஆவது இடமும், ராகுல் ரோஹிலா 47-ஆவது இடமும், கே.டி. இா்ஃபான் 51-ஆவது இடமும் பிடித்தனா். பந்தய தூரத்தை சந்தீப் 1 மணி நேரம் 25.07 நிமிஷத்திலும், ராகுல் 1 மணி நேரம் 32.06 நிமிஷத்திலும், இா்ஃபான் 1 மணி நேரம் 34.41 நிமிஷத்திலும் எட்டினா்.
பதக்கம்: இந்தப் போட்டியில் இத்தாலியின் மசிமோ ஸ்டானோ (1:21.05) தங்கமும், கோகி இகெடா (1:21.14) வெள்ளியும், டோஷிகாஸு யமானிஷி (1:21.28) வெண்கலமும் வென்றனா்.