டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹாங்காங் வீராங்கனை யீ நகன் செயுங்கை 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலியுறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.