சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்த அதிகாரபூர்வ கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சாய்னாவின் தந்தை இதுபற்றி கூறியதாவது: ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக சாய்னா தேர்வாகியுள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சாய்னாவில் அந்த அமைப்பு ஏதாவது பயன் இருக்கும் என எண்ணியுள்ளார்கள். சாய்னாவை எண்ணிப் பெருமைப்படுகிறோம் என்றார்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான சாய்னா, ரியோ ஒலிம்பிக்கில் காயம் காரணமாக குரூப் சுற்றோடு வெளியேறினார். அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவருடைய வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாத இறுதிக்குள் களம் திரும்புவேன் என சாய்னா நெவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.