ஏலத்துக்கு வரும் இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கம்

ஏலத்துக்கு வரும் இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கம்

ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஏலத்துக்கு வருகிறது.

ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஏலத்துக்கு வருகிறது.
கடந்த 1952-ஆம் ஆண்டு ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் காஷாபா ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். கடந்த 1984-ஆம் ஆண்டு அவர் காலமான நிலையில், அவரது பெயரில் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் மல்யுத்த அகாதெமி அமைக்கப்படும் என்று 2009-ஆம் ஆண்டில் அப்போதைய மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் திலிப் தேஷ்முக் அறிவித்திருந்தார்.
2013-ஆம் ஆண்டில் அந்தப் பணிகளுக்காக ரூ.1.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், உரிய பணிகள் நடைபெறவில்லை எனக் கூறும் அவரது மகன் ரஞ்சித் ஜாதவ், கட்டுமானப் பணிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தனது தந்தை வென்ற பதக்கத்தை ஏலத்தில் விடுவதாக கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com