பிஎஸ்ஏ சார்பில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பிலிப்பின்ஸின் மகாட்டி சிட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சாந்து தனது காலிறுதியில் 11-9, 11-4, 11-4 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் சன் ஹேய் யூனை வீழ்த்தினார்.
முன்னதாக சாந்து தனது முதல் சுற்றில் 15-13, 11-9, 11-8 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான விஜயகுமாரை தோற்கடித்தார்.
அதேநேரத்தில் இந்தியாவின் அபய் சிங், அகான்ஷா சலுங்கே ஆகியோர் காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.