முழங்கால் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதாக இந்திய மகளிர் இரட்டையர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறினார்.
இதுகுறித்து, மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
என்னுடன் விளையாடிய இணைகள் காயம் கண்டு வந்ததால் இந்த ஆண்டு கடினமான ஒன்றாக இருந்தது. இந்நிலையில், எனக்கும் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இன்னும் 2 வாரங்கள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன்.
இந்தக் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்குமா என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், இந்த ஆண்டை தரவரிசையின் 12-ஆவது இடத்தில் நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி என்று சானியா மிர்சா கூறினார்.
2016-ஆம் ஆண்டு சீசன் முழுவதும் இரட்டையர் தரவரிசையின் முதலிடத்தில் இருந்த சானியா, 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக முதல் 10 இடங்களை விட்டு வெளியேறியுள்ளார்.