* தற்போதைய நிலையில் நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. எனது டென்னிஸ் வாழ்க்கையைப் பற்றி எனது சாதனைகள் பேசும். எனக்கு 44 வயதாகிவிட்டாலும், தொடர்ந்து டென்னிஸ் போட்டியில் விளையாடுவதை விரும்புகிறேன் என்று இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்துள்ளார்.
* சென்னையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் சசிகுமார் முகுந்த், அர்ஜுன் காடே ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
* இந்திய மகளிர் குத்துச்சண்டை அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான ஸ்டீபன் கேட்டலோர்டா ஒரு மாதத்திற்குள்ளாகவே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஊதியம் தாமதமானது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் ராஜிநாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.