சீனாவின் குவாங்ஷுவில் நடைபெறவுள்ள உலக பாட்மிண்டன் சம்மேளன டூர் பைனல்ஸ் ஆட்டத்தில் பி.வி.சிந்துவுக்கு கடினமான சுற்று ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற இப்போட்டியில் சிந்து இரண்டாம் இடம் பெற்றிருந்தார். தற்போது நடப்பு சாம்பியன் அகேன் யெமகுச்சி, உலகின் நம்பர் ஒன் வீராங்கனை டை சு யிங், பெய்வன் ஸாங் ஆகியோர் கொண்ட குரூப் ஏ பிரிவில் சிந்து இடம் பெற்றுள்ளார். எனினும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அறிமுக வீரர் சமீர் வர்மாவுக்கு நாக் அவுட் சுற்று வரை தகுதி பெறும் வகையில் எளிதான சுற்றே அமைந்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் வீரர் கென்டோ மொமடோ, டாமி சுகிர்தோ, கன்டபோன் வாங்சோரன் ஆகியோர் கொண்ட பிரிவில் சமீர் வர்மா இடம் பெற்றுள்ளார்.