இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டி20 போட்டி ஆட்டம் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவன் 24, சுரேஷ் ரெய்னா 31, பாண்டியா 79, தோனி 52 ரன்கள் என எடுத்துள்ளனர்.
189 ரன்களை இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணி தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.