ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது அழிவுக்கு வழிவகுக்கும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
ஒரு நாள் போட்டியில் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது அழிவுக்கு வழிவகுக்கும். புதிய பந்துகள் பழையதாக மாற நேரம் தரப்படுவதில்லை. ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு வாய்ப்பும் இல்லை. கடைசி கட்ட ஓவர்களில் ஏற்படும் ரிவர்ஸ் ஸ்விங் முறையை நாம் நீண்ட நாள்களாக காணமுடிவதில்லை. இது அழிவை தேடிச் செல்வதற்கு ஒப்பாகும் என்றார்.