சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை 2-1 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி கடைசிப் போட்டிகள் நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் உலகின் தலைசிறந்த 6 அணிகள் பங்கேற்றுள்ளன. சனிக்கிழமை நடந்த துவக்க ஆட்டத்தில் பரம வைரி பாகிஸ்தானை சாய்த்தது இந்தியா. அதன் தொடர்ச்சியாக ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவுடன் ஞாயிற்றுக்கிழமை மோதியது.
17-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோலடித்தார். 28-வது நிமிடத்தில் மந்தீப் சிங் பீல்ட் கோலடித்தார். ஆர்ஜென்டீனா வீரர் கோன்ஸாலோ பெய்லட் ஆறுதல் கோலை அடித்தார். இதன் மூலம் இந்தியா அபார வெற்றி பெற்றது. வரும் 27-ஆம் தேதி உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்தியா.