ஹாங்காங் ஓபன் பாட்டமிண்டன் போட்டியில் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா ஆகியோர் உள்ளனர்.
உலக பாட்மிண்டன் 500 சூப்பர் சீரிஸ் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. நடப்பாண்டு சிந்து உலக சாம்பியன், ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
மேலும் முந்தைய போட்டியில் சீன தைபேவின் உலகின் முதல்நிலை வீராங்கனை டைசூயிங்குக்கு அடுத்து சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். தாய்லாந்து, இந்தியா ஓபன் போட்டிகளிலும் இறுதிக்கு முன்னேறினார். சிந்து முதல் ஆட்டத்தில் தாய்லாந்தின் ஜின்டாபோலை எதிர்கொள்கிறார்.
சாய்னா நெவால் முதல் சுற்றிலேயே ஜப்பானின் வலுவான அகேன் யமகுச்சியை எதிர்கொள்கிறார்.
ஆடவர் பிரிவில் கே.ஸ்ரீகாந்த், பிரணாய், சாய் பிரணீத், ஆகியோர் பங்கேற்கின்றனர். இரட்டையர் பிரிவில் சத்விக்-ரங்கிரெட்டி, மனு அட்ரி-சுமித் ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி, ஆகியோர் பங்கேற்கின்றனர்.