மகளிர் கிரிக்கெட்: இந்திய ஏ அணி தோல்வி

ஆஸி.ஏ மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் 91 ரன்கள்வித்தியாசத்தில் இந்திய ஏ அணி தோல்வியடைந்தது.

ஆஸி.ஏ மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் 91 ரன்கள்வித்தியாசத்தில் இந்திய ஏ அணி தோல்வியடைந்தது.
 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் மும்பையில் நடைபெறுகிறது. இதன் துவக்க ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸி. மகளிர் அணி 50 ஓவர்களில் 271/8 ரன்களை குவித்தது. ஆஸி. அணியில் டஹிலா மெக்ராத், 66 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். ஹீதர் கிரஹாம் 48, நவோமி 47 ரன்களை எடுத்தனர்.
 பின்னர் ஆடிய இந்திய அணி 46.2 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிதி போஸ் 62, ஷிகா பாண்டே 42 ரன்களை எடுத்தனர்.
 இறுதியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி வென்றது. இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் புதன்கிழமை நடக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com