சீனாவில் நடைபெற்று வரும் நிங்போ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னை வீரரான குணேஸ்வரன் 6-3, 2-6, 7-6 என்ற செட் கணக்கில் போராடி சீனாவின் ùஸ லீயை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஒற்றையர் பிரிவில் களத்தில் உள்ள ஓரே வீரர் குணேஸ்வரன் ஆவார்.
ராம்குமார் ராமநாதன், சுமித் நகல், சாகேத் மைனேனி ஆகியோர் வெளியேறி விட்டனர். இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் பாலாஜி-மைனேனி இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த இணை 6-0, 6-3 என்ற செட் கணக்கில் ஹிரோகி மோர்யா-ரூபின் இணையை வென்றது.