போலந்து குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.
கிளிவைஸ் நகரில் 13-ஆவது ஸைலேஷியன் ஓபன் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் 60 கிலோ அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவை 0-5 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தானின் கரீனாவிடம் தோல்வியுற்று வெண்கலப் பதக்கம் வென்றார். எனினும் இப்போட்டியில் நடுவர்கள் சரிதாவுக்கு எதிராக செயல்பட்டதாக இந்திய குழுவினர் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே ஜூனியர் அணியினர் சிறப்பாக செயல்பட்டு 6 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலத்தை வென்றநர். பாரதி, டிங்மிலா, சந்தீப் கெüர், நேஹா, அர்ஷி கனம், கோமல் தங்கப்பதக்கத்தையும், அமிஷா, சான்யா, தினேஷ் நாயக், சஞ்சய் குணேலே, ராஜ் சாஹிபா, லிபாஷி, வெள்ளியையும், நேஹா வெண்கலத்தையும் வென்றனர்.