சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். எனினும், சாய்னா நெவால் தொடக்க சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
சாங்úஸாவ் நகரில் நடைபெறும் இப்போட்டியில், சிந்து தனது தொடக்க சுற்றில் உலகின் 39-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சேனா கவாகாமியை எதிர்கொண்டார். போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்களில் கவாகாமியை வீழ்த்தினார்.
அதேபோல், சாய்னா நெவால் தனது தொடக்க சுற்றில் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை எதிர்கொண்டார். சுமார் 48 நிமிடங்களுக்கு நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் சாய்னா 22-20, 8-21, 14-21 என்ற செட்களில் சங் ஜியிடம் வீழ்ந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் தேசிய சாம்பியனான இந்தியாவின் மானு அத்ரி/சுமீத் ரெட்டி இணை தங்களது முதல் சுற்றில் சீன தைபேவின் லியாவ் மின் சன்/சு சிங் ஹெங் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக 39 நிமிடங்களுக்கு நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் 13-21, 21-13, 21-12 என்ற செட்களில் மானு/சுமீத் இணை வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.