ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் விராட் கோலி

ஐசிசி தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்தார்.
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் விராட் கோலி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டனில் ஆகஸ்டு 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இப்போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும், 2-ஆவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்திருந்தார். இதனால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மொத்தம் 934 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க தொடரின் போது பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு சரிந்தார். இதர இந்திய வீரர்களில் சேத்தேஷ்வர் புஜாரா 791 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com